உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் பேசினார்.

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-09-17 09:46 GMT   |   Update On 2022-09-17 09:46 GMT
  • போதை பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று பேசினார்.
  • பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமை வகித்து கஞ்சா , அபின் போன்ற போதைப் பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள் , மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பது குறித்து அதன் பயன்பாடுகளை தவிர்ப்பது" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

நிகழ்ச்சியில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து அதற்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி , பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News