உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்

நல்லூரில் அம்பை 21 ரகம் பற்றிய சிறப்பு பண்புகளின் விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-05-25 08:49 GMT   |   Update On 2023-05-25 08:49 GMT
  • நோய் தாக்குதல் மற்றும் அதனை மேலாண்மை செய்யும் முறைகள் பற்றி ரஜினிமாலா எடுத்துரைத்தார்.
  • பூச்சி தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆல்வின் எடுத்து கூறினார்.

ஆலங்குளம்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நெல் ஆராய்ச்சி நிலையம் அம்பையில் இருந்து வெளியிடப்பட்ட புதிய நெல் ரகம் அம்பை 21 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஆலங்குளம் வட்டாரம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் ஆராய்ச்சி நிலையம், சிற்றாறு உப வடிநில பகுதி கிராமமான நல்லூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு அம்பை 21 ரகம் பற்றிய சிறப்பு பண்புகள் , உற்பத்தி செய்யும் முறைகளை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் எடுத்துரைத்தார். நோய் தாக்குதல் மற்றும் அதனை மேலாண்மை செய்யும் முறைகள் பற்றி ரஜினிமாலா எடுத்துரைத்தார். மேலும் பூச்சி தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆல்வின் எடுத்து கூறினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் மற்றும் நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் அருண்சசிக்குமார் , சுடலைஒளிவு ஆகியோர் செய்தனர். கூட்டத்தில் நல்லூர் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News