உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு அரங்கு

Published On 2023-03-28 14:33 IST   |   Update On 2023-03-28 14:33:00 IST
  • இந்த அரங்கை பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி திறந்து வைத்தார்
  • மஞ்சள் துணிப்பை உபயோகப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரவேணு,

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு மறு சுழற்சி செய்யப்பட்ட உரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வீணாகும் பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது குறித்து விழிப்புணர்வு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரங்கை பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி திறந்து வைத்தார். குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் அரங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மஞ்சள் துணிப்பை உபயோகப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பேரூராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் ஆய்வாளர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு புகைப்படங்கள், மாற்றுப்பொருட்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வீணாக்காமல் மாற்று பயன்பாட்டிற்கு உபயோகிப்பது குறித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News