உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு போக்குவரத்து துறை போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்திய காட்சி.

சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-06-18 08:31 GMT   |   Update On 2023-06-18 08:31 GMT
  • இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் போக்கு–வரத்து காவல்துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரே அம்பேத்கர் சிலை பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்து, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது. இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது, சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கக் கூடாது.

கனரக வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது, உரிமம் இல்லாத வாகனத்தை இயக்கக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண விவரம் குறித்து வாகன ஓட்டிகள் இடையே எடுத்துரைத்தார்.

இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மாதப்பன், முருகன், காவலர் மூர்த்தி மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News