உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு கேடயம் வழங்கினார்.

தோழகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு விருது

Published On 2022-12-05 09:16 GMT   |   Update On 2022-12-05 09:16 GMT
  • பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.
  • இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு தொடக்க க்கல்வி துறை சார்பில் 2021-22-ம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊரக ஒன்றியம், தோழகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.

இதனை தஞ்சாவூர் ஊரக ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் ரீட்டாமேரி, ஆசிரியர் சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விருது பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர், சிறப்பு பணி அலுவலர் இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News