உள்ளூர் செய்திகள்

கொள்ளை சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தில் மற்றொரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது

Published On 2023-02-13 09:01 IST   |   Update On 2023-02-13 09:01:00 IST
  • கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரு எந்திரத்தை மட்டும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி அதில் இருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
  • கொள்ளையர்கள் எதிரில் இருந்த மற்றொரு எந்திரத்தை எந்தவித கொள்ளை முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டு சென்று உள்ளனர்.

திருவண்ணாமலை:

கொள்ளை சம்பவம் நடைபெற்ற திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் 2 வெவ்வேறு பணம் எடுக்கும் எந்திரங்கள் இருந்தன.

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரு எந்திரத்தை மட்டும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி அதில் இருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு எதிரில் இருந்த மற்றொரு எந்திரத்தை எந்தவித கொள்ளை முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டு சென்று உள்ளனர்.

அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் அதில் இருந்தது என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News