உள்ளூர் செய்திகள்

வடுகபாளையத்தில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு

Published On 2023-01-09 11:01 IST   |   Update On 2023-01-09 11:01:00 IST
  • வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும்.
  • பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன

பல்லடம் : 

பல்லடம் வடுகபாளையம் ஹலோபிளாக் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(வயது 62). இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகிறார். இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த சுமார் 5 வயதான பசுமாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.

வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும். இந்த பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. அந்த இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இது குறித்து ஈஸ்வரி கூறியதாவது:- எங்கள் வீட்டில் 5 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறோம்.இதுபோல ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது இல்லை. தற்போதுதான் இது நடந்துள்ளது. இதனை எங்கள் குடும்பத்திற்கு "தெய்வத்தின்" கருணையாக பார்க்கின்றோம். பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News