உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு

Published On 2022-09-13 15:43 IST   |   Update On 2022-09-13 15:43:00 IST
  • மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் குறித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவா சன் ஆய்வு செய்தார்.
  • இதில், ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் சுதாகர், பள்ளி தலைமையாசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர், 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாணவர்க ளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம், பள்ளிகளில் செயல்படுத்த ப்பட உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பாத்தகோட்டா வில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்ஏ.வுமான ஒய். பிரகாஷ் வழிகாட்டுத லின்பேரில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் குறித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவா சன் ஆய்வு செய்தார்.

இதில், ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் சுதாகர், பள்ளி தலைமையாசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News