கள்ளக்குறிச்சியில்: குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டது.
- அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பானமனுக்கள் உட்பட பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய 407மனுக்களை பெற்று க்கொண்ட மாவட்ட வருவாய் அலு வலர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்த ப்பட்ட அலுவல ர்களிடம் கேட்ட றிந்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவ லர்களுக்கு அறிவுறு த்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், தமிழ்நாடு தூய்மை பணி புரிவோர் நலவா ரியத்தின் நலவாரிய அட்டையினை தூய்மை பணிபுரியும் பணியா ளர்களுக்கு வழங்க ப்பட்டது.முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட மாற்று த்திறனாளிக ள்நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்தி றனாளிக்கு ரூ.7,000 மதிப்பீட்டிலான சிறப்பு நாற்காலியும், பார்வை குறைபாடுடைய மாற்று த்திறனாளி ஒருவருக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கியும், பார்வையற்ற மற்றும் காதுகேளா தோர்க ளுக்கான ரூ.12,000 மதிப்பீட்டிலான பிர த்யேக செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு அலைபேசி 3 மாற்று த்திறனாளிகளுக்கும் வழ ங்கினார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயரா கவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.