உள்ளூர் செய்திகள்

ஓசூர் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள்

Published On 2022-12-18 15:11 IST   |   Update On 2022-12-18 15:11:00 IST
  • மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி விழாவில் பேசினார்.
  • கட்சி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

ஒசூர் மூக்கண்டப்பள்ளி மாநகராட்சி தொடக்க ப்பள்ளியில் தி.மு.க.வின் முன்னாள் பொது ச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி ஒசூர் மாநகராட்சி மேயரும், மாநகர தி.மு.க. செயலாளருமான எஸ்.ஏ.சத்யா, மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி விழாவில் பேசினார்.

இதில், தலைமையாசிரியர் ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News