உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சர்வதேச முதியோர் தினம்
- மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதத்தை வழங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சிக்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் அவர்களுக்கு, வாக்காளர்களுக்கான இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதத்தை வழங்கினார்.
இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் அஜிதா, மாநகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.