உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

Published On 2022-10-05 15:06 IST   |   Update On 2022-10-05 15:06:00 IST
  • மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
  • பூஜைகளுக்கு பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு துணை மேயர் ஆனந்தய்யா ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூஜைகளுக்கு பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

மேலும் விழாவில், அசோகா, ஸ்ரீதரன், மாதேஸ்வரன், சென்னீ ரப்பா, நாகராஜ், மோசின் தாஜ் நிஜார் அகமது, இந்திராணி உள்ளிட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News