உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்

Published On 2023-11-20 09:02 GMT   |   Update On 2023-11-20 09:02 GMT
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும்.

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நடப்பாண்டு சிறப்பு பட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 22-ந் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 31-ந் தேதி வரையிலும் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.487, மக்காச்சோளத்திற்கு ரூ.296, பருத்தி பயிருக்கு ரூ.484 தொகையினை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மட்டும் தேசிய மயமாக்க ப்பட்ட வங்கிகளில் செலுத்தி பதிவு செய்யலாம்.

பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை ரிஷிவந்தியம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News