உள்ளூர் செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்; லாரி டிரைவர் கைது

Published On 2022-09-06 09:49 GMT   |   Update On 2022-09-06 09:49 GMT
  • சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பிரியா காபி பாரில் டீ குடிக்க சென்றுள்ளார்.
  • பலத்த காயம் அடைந்த ஜீவானந்தம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் சிங்கார முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பிரியா காபி பாரில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபரும், ஜீவானந்தமும் அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட தாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜீவானந்தம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் அருள் குமார் (24) என்பவரை கைது செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News