உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2023-06-07 15:12 IST   |   Update On 2023-06-07 15:12:00 IST
  • பிரதீக் தனது மனைவி ஸ்ரீநிதியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
  • போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி கட்டியானபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீக் ஸ்ரீவசத்வ் (வயது32). இவரது மனைவி ஸ்ரீநிதி (29). கணவன்-மனைவி இருவரும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பிரதீக் தனது மனைவி ஸ்ரீநிதியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீநிதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் பிரதீக் ஸ்ரீவசத்வ் மற்றும் மாமனார் ராஜேந்திரபிரசாத், மாமியார் ஷப்னாவதி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News