உள்ளூர் செய்திகள்

டியூசன் செல்லாததை தாய் கண்டித்ததால்10-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-08-13 09:29 GMT   |   Update On 2023-08-13 09:29 GMT
  • சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.
  • விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 14 வயதில் மீனா என்ற மகளும், 15 வயதில் ஹரிராம் என்ற மகனும் உள்ளனர்.

சந்திரன் கடந்த 4 வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சங்கீதா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஹரிராம் மாரண்ட அள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News