உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

நிலக்கோட்டை அருகே மது போதையில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

Published On 2023-11-14 13:01 IST   |   Update On 2023-11-14 13:01:00 IST
  • கூலித் தொழிலாளியும், அவரது நண்பரும் சின்னச்சாமி என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர்.
  • அப்போது சின்னச்சாமியும் அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மணி மகன் ராஜேஷ்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும் அவரது நண்பரான பாண்டியும் சின்னச்சாமி என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சின்னச்சாமியும் அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதனிடையே ராஜேஷ்குமார் தரப்பினரு க்கும் சின்னச்சாமி தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ராஜேஷ்கு மாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து விலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மோதலில் ஈடுபட்ட சின்னச்சாமி, கவுரிமணி, கருப்புச்சாமி, பேச்சியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

சின்னச்சாமியை கைது செய்தனர். இதனிடையே காயமடைந்த ராஜேஷ்குமார் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News