வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர தி.மு.க. சார்பில் ஜெயங்கொண்டத்தில், வாக்குச்சாவடி பணிக்குழு உறுப்பினர்கள் பயிற்சி கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமை தாங்கினார். கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான சபாபதிமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து ெகாண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி சிற ப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க.ராமகிருஷ்ணன்,
துணை அமைப்பாளர்கள் பஞ்சநாதன், கார்த்திக், பழ.புனிதம், சுபா. ச.வசந்தபகலவன், வட்ட கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி பணிகுழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.