உள்ளூர் செய்திகள்

இலவச தொழில் பயிற்சியில் சேர வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-07-18 07:43 GMT   |   Update On 2022-07-18 07:43 GMT
  • இலவச தொழில் பயிற்சியில் சேர வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சுய வேலைவாய்ப்புபயிற்சி நிறுவனம் சார்பில் நடத்த–ப்படும் கீழ்கண்ட இலவச தொழிற் பயிற்சி பெற ஆர்வமுள்ள வேலை–வா–ய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது: எலக்ட்ரிக்கல், மோ–ட்டார் ரீவைண்டிங்,சிசிடிவி இன்ஸ்டாலேசன் மற்றும் சர்வீஸிங் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செயல்மு–றை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் 25.07.2022 அன்று தொடங்க–ப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்தால் போதும்,

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, ஆதார் மற்றும் ரேசன் கார்டு, மாற்றுச் சான்றிதழ், 100 நாள் வேலை அட்டை ஆகிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

முன்பதிவு தொடர்புக்கு : 9944850442, 9626497684, 7539960190, 7804202360, 9626644433, இயக்குநர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின்ரோடு, கீழுப்பழுவூர், அரியலூர் என முகவரியை தொடர்பு–கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்ப–ட்டுள்ளது.

Tags:    

Similar News