உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2023-08-25 11:55 IST   |   Update On 2023-08-25 11:55:00 IST
  • விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 51), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், மன வேதனை அடைந்த முருகவேல் விஷம் குடித்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகவேல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News