உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனம் திருட்டு

Published On 2023-09-07 15:20 IST   |   Update On 2023-09-07 15:20:00 IST
  • இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்

அரியலூர்

ஜெயங்கொண்டம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 31). இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News