உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2022-09-01 14:19 IST   |   Update On 2022-09-01 14:19:00 IST
  • வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்.
  • சொந்த ஊர் நோக்கி இருசக்கரவாகனத்தில் வந்துள்ளார்

அரியலூர்;

திருச்சி மாவட்டம், விரகாலூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆபேல்ராஜ்(வயது 29). இவர் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சிதம்பரம்- திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் துணை மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஆபேல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News