உள்ளூர் செய்திகள்

கீரனூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Published On 2023-06-23 12:24 IST   |   Update On 2023-06-23 12:24:00 IST
  • கீரனூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
  • மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீரனூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம், ஆசிரியர்கள் ரமேஷ், பாலகுமார், கபிரியேல், சோலைமுத்து மற்றும் மரமடக்கி பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும்் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News