உள்ளூர் செய்திகள்

தில்லை காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்

Published On 2022-09-02 14:58 IST   |   Update On 2022-09-02 14:58:00 IST
  • தில்லை காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம் நடைபெற்றது.
  • கொடியேற்றத்துடன் தொடங்கியது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருநடன உற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஒரு மண்டலம் விரதம் இருந்தவர் அம்மன் போல் நகைகள், புடவை அணிந்துகொண்டு நடனமாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று அருள்வாக்கு கூறினார். பின்னர் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்."

Tags:    

Similar News