உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்திற்கு சென்ற பெண் மாயம்

Published On 2023-09-10 11:46 IST   |   Update On 2023-09-10 11:46:00 IST
  • கும்பாபிஷேகத்திற்கு சென்ற செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் மாயம்
  • வழக்கு பதிந்து ஜெயங்கொண்டம் போலீசார் தேடி வருகின்றனர்

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (75) இவரது மனைவி உமா (55) அப்பகுதி அருகே கோயில் கும்பாபி ஷேகத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் தியாகராஜன் அக்கம் பக்கத்தில், உறவினர்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான உமாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News