- குடிசை வீடு எரிந்து நாசமானது
- 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிக் கருப்பூர் வடக்கு காலனியை சேர்ந்த–வர் கிருஷ்ணன் மனைவி பார்வதி (70). கிருஷ்ணன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பார்வதி மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
பார்வதி வெளியே சென்று விட்டு இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போதுதிடீரென அவரது குடிசை வீடு தீப்பி–டித்து எரிந்தது.
இதைத் தொடர்ந்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டில் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் கருகி–யது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறை–யினர் வழக்குப்பதிந்து விசார–ணை மேற்கொண்டு வருகின்றனர்.