உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணை - கலெக்டர் வெளியிட்டார்

Published On 2022-07-07 10:13 GMT   |   Update On 2022-07-07 10:13 GMT
  • பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணையை கலெக்டர் வெளியிட்டார்
  • தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், உணவு பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேநீர் கோப்கைள் மற்றும் பிளாஸ்டிக் டம்பளர், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக்குகள் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதார கேடு விளைவிக்க காரணமாக இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்று பொருட்களை பயன்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களான சணல்பை, துணிப்பை, காகித பைகள், பாக்கு மட்டைத்தட்டுகள், தென்னை, மரத்தலான கோப்பைகள், மரக்கரண்டிகள், பனை ஓலைகளால் ஆன பூஜை தட்டுகள் மற்றும் மண்பாண்டங்களால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் குடுவைகள், அகல்விளக்குகள், மண் சாடிகள், மண்சட்டி ஆகிய பிளாஜ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.

Tags:    

Similar News