உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர எஸ்.சி., எஸ்.டி,. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-12 09:41 GMT   |   Update On 2022-07-12 09:41 GMT
  • பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர எஸ்.சி., எஸ்.டி,. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • இருப்பிடம் 5 கிேலா மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் 13 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 7 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதியும் உள்ளன. பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பம் பதிவு வரும் 27ந் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு வரும் 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட வேண்டிய நாள் அடுத்த மாதம் 10-ந் தேதியாகும். மாணவ,மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

மாணவர் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைவெளி 5 கிேலா மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News