உள்ளூர் செய்திகள்

மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி

Published On 2023-07-09 11:33 IST   |   Update On 2023-07-09 11:33:00 IST
  • மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
  • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோமதி (வயது 37). இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் தனது மகளுடன் செந்துறைக்கு சென்றார். அப்போது கோமதியின் சேலை மொபட்டின் சக்கரத்தில் சிக்கியதில், அவர் கீழே விழுந்தார். இதையடுத்து கோமதியை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து வந்து கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News