உள்ளூர் செய்திகள்
அரியலூர் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம்
- முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
- முகாமில் 75-க்கும் மேற்பட்ட ஆயுதப் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.
அரியலூர்:
அரியலூரிலுள்ள ஆயுதப் படை வளாகத்தில், காவல் துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்தான முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஆயுதப் படை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அவசரகால மருத்துவ அருண்சங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 75-க்கும் மேற்பட்ட ஆயுதப் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.
ரத்தானம் அளித்தவர்களுக்கு காவல் துறை சார்பில் பாராட்டு சான்றிதழும், ஊட்டச்சத்து பொருள்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை ஆய்வாளர் பத்மநாபன், மாவட்ட ஊர்க்காவல் படை ஏரிய கமாண்டர் ஜீவானந்தம் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.