உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் மஞ்சம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜேந்திரன், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, துணைத் தலைவர் மலர்விழி சிவானந்தம், ஊராட்சி செயலர் இளவரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.