உள்ளூர் செய்திகள்

மீட்பு பணிகளுக்காக மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு

Published On 2023-10-28 06:20 GMT   |   Update On 2023-10-28 06:20 GMT
  • அரியலூர் மாவட்டத்தில் வெள்ளக்கால மீட்பு பணிக்காக மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு வழங்கப்பட்டு உள்ளது
  • தீயணைப்பு துறையினர், கலெக்டரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பருவமழை கால மீட்பு பணிகளுக்காக  கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா,  நிதியிலிருந்து ரூ.4.65 லட்சம் மதிப்பிலான மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு வாங்கப்பட்டுள்ளது. இந்த படகை மாவட்ட தீயணைப்புத் துறை   அலுவலர் அம்பிகாவிடம், கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்ஆனந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News