உள்ளூர் செய்திகள்

திருமானூர் சிவன்கோவிலில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

Published On 2023-02-20 13:57 IST   |   Update On 2023-02-20 13:57:00 IST
லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் விழா நடைபெற்றது.

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுரை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் 2ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க செயளர் புண்ணியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை பாஸ்கர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதி, மகேஸ்வரி நாதசுரம் இசைக்கப்பட்டது. திருமானூர் பரதநாட்டியம் கிருபாதேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும் நிகழ்ச்சியில் புண்ணியமூர்த்தி, வடிவேல் முருகன், ஜெயபாலன், சத்தியசீலன் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, கைலாகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் லயன் சங்கம் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News