உள்ளூர் செய்திகள்

30 பேருக்கு காமராஜர் விருது

Published On 2023-02-04 05:54 GMT   |   Update On 2023-02-04 05:54 GMT
  • கலெக்டர் வழங்கினார்
  • மாணவர்களை பாராட்டி சான்றிதழ்

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் கல்வி இணையச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, மாணவ, மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவர் காமராசர் விருதும், பரிசுத் தொகையும் வழங்கி பாராட்டினர். மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் சிறந்த 30 மாணவ, மாணவியர்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து, அம்மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழ் பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 வீதம் 15 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20,000 வீதம் 15 மாணவர்களுக்கும் என மொத்த ரூ.4,50,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News