உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-02-15 06:36 GMT   |   Update On 2023-02-15 06:36 GMT
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் பள்ளிக்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News