உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி - எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்

Published On 2022-08-17 09:36 GMT   |   Update On 2022-08-17 09:36 GMT
  • ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
  • ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம், கோடாலி கருப்பூர், காரைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பள்ளிமாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கப்பட்டது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

முதல் கட்டமாக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம், கோடாலி கருப்பூர், காரைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News