உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2022-07-29 14:56 IST   |   Update On 2022-07-29 14:56:00 IST
  • புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பிள்ளை மகன் கண்ணன்(வயது47). கடந்த 2020 ஆம் ஆண்டு இவர், தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பிள்ளை மகன் கண்ணன்(வயது47). கடந்த 2020 ஆம் ஆண்டு இவர், தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கண்ணனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபாதமும் விதித்து தீர்ப்பளித்து உள்ளார்.

Tags:    

Similar News