உள்ளூர் செய்திகள்

தீவிபத்தில் பாதிக்கபட்டோருக்கு நிதியுதவி

Published On 2022-07-04 09:38 GMT   |   Update On 2022-07-04 09:38 GMT
  • மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.
  • ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தில் காலனி தெருவில் மின் கசிவால் ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

இது குறித்து அறிந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News