உள்ளூர் செய்திகள்

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-08-25 15:21 IST   |   Update On 2022-08-25 15:21:00 IST
  • அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.
  • கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

அரியலூர் :

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News