உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூரில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்