உள்ளூர் செய்திகள்

ஜி.எஸ்.டி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-29 09:45 GMT   |   Update On 2022-07-29 09:45 GMT
  • ஜி.எஸ்.டி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
  • மார்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

அரியலுர்:

அரிசி, பருப்பு, போதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் அருணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், அம்பிகா, கிருஷ்ணன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News