உள்ளூர் செய்திகள்
திருமானூரில் சி.பி.எம். பேரவை கூட்டம்
- திருமானூரில் சி.பி.எம். பேரவை கூட்டம் நடைபெற்றது
- கட்சி உறுப்பினர்களுக்கு எம்.எல்.ஏ. மாரிமுத்து அடையாள அட்டை வழங்கினார்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் தனியார் மண்டபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ., மாரிமுத்து கொடியேற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் பின்னர் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், ராமநாதன், தண்டபாணி, கனகராஜ், ஜீவா, மருதமுத்து உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.