உள்ளூர் செய்திகள்

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Published On 2022-06-26 08:35 GMT   |   Update On 2022-06-26 08:35 GMT
  • எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
  • கலெக்டர் தெரிவித்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் வருகிற 28.6.22 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டுதங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News