உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-20 06:44 GMT   |   Update On 2022-09-20 06:44 GMT
  • தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது
  • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் மண்டபத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி கூட்டத்தில் இளைஞர்களுக்கு திராவிட மாடல் பற்றிய பல்வேறு கருத்துக்களை வழங்கினார். இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா கலந்து கொண்டு இளைஞர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பற்றி விளக்கி கூறினார்கள்.மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News