உள்ளூர் செய்திகள்
- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூர் காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் துக்கு, அக்கட்சியின் நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார். செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவக்குமார், வட்டாரத் தலைவர்கள் டி.சீனிவாசன், பாலகிருஷ்ணன், எஸ்.திருவாவுக்கரசு, கங்காதுரை, அழகா–நந்தம், ராகவன், பூண்டி சந்தானம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகழ், துணைத் தலைவர் கலைச்செல்வன் ஐஎன்டியுசி தலைவர் தர்மாவிஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.