உள்ளூர் செய்திகள்

துப்புரவு தொழிலாளி மர்ம சாவு

Published On 2023-11-20 06:45 GMT   |   Update On 2023-11-20 06:45 GMT
  • ஜெயங்கொண்டம் அருகே துப்புரவு தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார்
  • பிணத்தை கைப்பற்றி கொலையா? என்று போலீஸ் விசாரணை

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்பு ஒரு முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனை ப ார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பருகம் காலனியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 60) என்பவதும், இவர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்து தற்போது வீட்டில் இருப்பதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து ே பாலீசார் ,இறந்தவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News