உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்டம்

Published On 2023-08-05 11:45 IST   |   Update On 2023-08-05 11:45:00 IST
  • ஆண்டிமடத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
  • அனுமதி இல்லாமல் ஏரிகளில் மண் அள்ளுவதாக கூட்டத்தில் குற்றச்சாட்டு

 ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் வைத்தி தென்மொழி வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி கிராம ஊராட்சி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் ஒன்றியங்கள் உறுப்பினர்கள் அனுமதி பெறாமல் ஏரிகளில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் மற்றும் நாகப்பந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பெரிய கிருஷ்ணாபுரம் நியாய விலை கடை புதிதாக கட்டித் தர வேண்டும்.பின்னர் ஒன்றிய குழு தலைவர் கூறுகையில் ஒன்றிய குழுவிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News