உள்ளூர் செய்திகள்

கிராமங்களில் வேளாண் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

Published On 2022-06-10 13:57 IST   |   Update On 2022-06-10 13:57:00 IST
  • கிராமங்களில் வேளாண் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • மானியத்திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனிகுறிச்சி, சுத்தமல்லி, காடுவெட்டான் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க போர்டு திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை தாங்கி சங்க போர்டுகளை திறந்து வைத்து தமிழக அரசின் கலைஞர் கிராமத் திட்டம், தரிசு நில மேம்பாட்டு இயக்கம் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலமாக கிடைக்கின்ற மானியத்திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, வேளாண், தோட்டக்கலை மற்றும் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக கிராமம் தோறும் சென்று வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் தா.பழூர் ஒன்றிய தலைவர் அனி குறிச்சி சாமிதுரை, சுத்தமல்லி பழனிச்சாமி,

சாமிதுரை, ராஜமாணிக்கம், அய்யப்பன்,தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News