உள்ளூர் செய்திகள்
ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
- தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மாநாடு நிதியளிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நிகழச்சியில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும் போது:-
தமிழகத்தில் ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், ஊழல் தடுப்பு போலீசார் சோதனை செய்தும், அந்த அமைச்சர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என தெரியவில்லை. ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் ஊழலை குறைக்க முடியும். பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டு வந்தாலும், அதைப் பற்றி கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என்றார்.