உள்ளூர் செய்திகள்

செந்துறை இ-சேவை மையத்துக்கு சீல்

Published On 2022-12-03 15:07 IST   |   Update On 2022-12-03 15:07:00 IST
  • செந்துறை இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது
  • முறைகேடு புகாரை தொடர்ந்து

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரபு என்பவர் நடத்தி வரும் தனியார் இ பொது சேவை மையத்தில், பிறப்பு, இறப்பு, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு உட்பட பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு இணையதளத்தில் மக்கள் விண்ணப்பிக்க செலுத்தும் பணத்தை முறையாக அரசுக்கு செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா ஆய்வு மேற்கொண்டார். இதில், முறைகேடு நடைபெறுவது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News